யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலானது நேற்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பெற்றோர் குண்டு வீசி தீயிட்டு எரித்ததுள்ளனர்.

அத்துடன் வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் என்பவற்றையும் உடைத்து சேதமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.