யாழிலுள்ள கடையொன்றில் பாணுக்குள் கண்ணாடித் துண்டு!

யாழிலுள்ள கடையொன்றில் பாணுக்குள் கண்ணாடித் துண்டு!

யாழ்ப்பாணத்திலுள்ள கடையொன்றில் நபரொருவர் கொள்வனவு செய்த பாணுக்குள் கண்ணாடித் துண்டொன்று
கண்டுபிடிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்றிரவு (21) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் - மருதனார் மடத்தில் உள்ள கடையொன்றில் இரவு உணவிற்காக நபரொருவர் வாங்கிய பாணிலேயே
குறித்த கண்ணாடித் துண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே பாண்  உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. 

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவித்துத் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.