நிலவில் தரையிறங்க அனுப்பப்பட்ட விண்கலம் தீப்பற்றி எரிந்தது!

நிலவில் தரையிறங்க அனுப்பப்பட்ட விண்கலம் தீப்பற்றி எரிந்தது!
நிலவில் தரையிறங்குவதற்காக கடந்த வாரம் அனுப்பப்பட்ட அமெரிக்க விண்கலம் பசிபிக் பகுதியில் தீப்பற்றுதலுக்குள்ளான நிலையில், அந்த திட்டம் தோல்வியடைந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோபோடிக்ஸ் என்ற தனியார் நிறுவனம் நிலவு குறித்த ஆய்வுக்காக கடந்த 8 ஆம் திகதி குறித்த விண்கலத்தை ஏவியிருந்தது.

எனினும், ஏவுகணையில் இருந்து விண்கலம் பிரிந்த சிறிது நேரத்தில் அதில் வெடிப்பு ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.

இதனால் பெரெக்ரைன் லேண்டர் (Peregrine) நிலவில் முறையாகத் தரையிறங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்ட்ரோபொடிக்ஸ் (Astrobotic's) நிறுவனம் தமது எக்ஸ் கணக்கில் விண்கலம் பூமியை நோக்கி வருவதாக குறிப்பிட்டிருந்தது.

குறித்த விண்கலத்தால் பூமியில் தரையிறங்க முடியாது என்பதால் அது தீப்பற்றுதலுக்குள்ளாகும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.