இராணுவ உலங்கு வானூர்தி விபத்து - 3 பேர் பலி - 20 பேர் காயம்!

இராணுவ உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் 3 அமெரிக்க வான் படையினர் உயிரிழந்ததுடன் 20 பேர் வரை காயமடைந்தனர்.

இராணுவ உலங்கு வானூர்தி விபத்து - 3 பேர் பலி - 20 பேர் காயம்!

இராணுவ உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் 3 அமெரிக்க வான் படையினர் உயிரிழந்ததுடன் 20 பேர் வரை காயமடைந்தனர்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இராணுவ பயிற்சியின் போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவின் TIWI தீவுகளை அண்மித்த பகுதியில் இராணுவப் பயிற்சியில் கலந்துகொண்ட அமெரிக்க இராணுவத்தினர் குழுவொன்றை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளின் பங்களிப்புடன் இந்த இராணுவப் பயிற்சி நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.