பாகிஸ்தானில் எரிபொருள் பற்றாக்குறை - இரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்!

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாகிஸ்தானில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதன் காரணமாக இன்று 48 விமான போக்குவரத்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் எரிபொருள் பற்றாக்குறை - இரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்!

தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், எரிபொருள் கிடைக்காததால் 48 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இரத்து செய்துள்ளது.

அன்றாடம் விமானங்களுக்கான குறைந்த எரிபொருள் விநியோகம் மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக விமானங்கள், இரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், சில விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.