உயிரிழந்தவரின் நுரையீரலில் இருந்து கண்டெடுக்கப்பட பல்!

உயிரிழந்தவரின் நுரையீரலில் இருந்து கண்டெடுக்கப்பட பல்!

நிமோனியா காய்ச்சலில் உயிரிழந்த ஒருவரின் நுரையீரல் இருந்து பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

பலாங்கொடை வலேபொட பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய(சுதுஹக்குறு கருணாரத்ன என்பவரே இவ்வாறு நிமோனியாவில் உயிரிழந்தார்.உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை இன்று பலாங்கொடை வைத்திய சாலையில் இடம் பெற்றது.

நீதிமன்றத்துக்கான வைத்திய அதிகாரி(சேத்தி சத்யா) முன்னிலையில் அவசர மரண பரிசோதகர் (பத்மேன்தர விஜயதிலக்க ) அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.இதன் போது உயிரிழந்தவரின் நுரையீரலில் இருந்து பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதனை அவதானித்த. வைத்தியர்கள் அதிர்ந்து போனார்கள். 

சில வருடங்களுக்கு முன்பு குறித்த பல் விழுந்து காணாமல் போய் நிலையில் அவரது பல் நுரையீரலில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.