தங்காலையில் குழந்தையொன்றை பிரசவித்த பெண் சடலமாக மீட்பு!

தங்காலையில் குழந்தையொன்றை பிரசவித்த பெண் சடலமாக மீட்பு!

தங்காலை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ரன்ன பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் குறித்த பெண் தங்காலை வைத்தியசாலையில் அண்மையில் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

இந்த நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு அறிவிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.