யாழில் கலகம் விளைவித்த 25 பெண்களுக்கு பிணை - 6 ஆண்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் - புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 31 பேரில் 25 பெண்களை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் 6 ஆண்களை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழில் கலகம் விளைவித்த 25 பெண்களுக்கு பிணை - 6 ஆண்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் - புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 31 பேரில் 25 பெண்களை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் 6 ஆண்களை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் குறித்த இளைஞர்களை தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இரண்டு வீடுகளும் முற்றிலும் சேதமடைந்ததுடன், காயமடைந்த இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பெண்களின் புகைப்படங்களை கணினி உதவியுடன் மாற்றம் (கிராஃபிக்) செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் 21 வயது மற்றும் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் இருவரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து குறித்த பகுதியில் ஏற்பட்ட கலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அச்சுவேலி பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினி உதவியுடன் மாற்றம் (கிராஃபிக்) செய்து ஆபாசமான சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையம் ஊடாக இணைய வழி குற்றப் பிரிவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் முறையிட்ட நிலையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமையே குறித்த வன்முறைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்த அச்சுவேலி பொலிஸார் 25 பெண்கள் உட்பட 31 பேரை நேற்றைய தினம் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது 25 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் மிகுதி 6 ஆண்களையும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.