இலங்கையின் குரங்குகளை வாங்குவதற்கு சீனா தயார் - மஹிந்த அமரவீர!

இலங்கையின் குரங்குகளை வாங்குவதற்கு சீனா தயார் - மஹிந்த அமரவீர!

சீனாவில் உள்ள பல தனியார் மிருகக்காட்சிசாலைகள் இலங்கையில் உள்ள குரங்குகளை கொள்வனவு செய்ய காத்திருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று அவர் உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டார்.

சீனாவில் சுமார் 20,000 தனியார் உயிரியல் பூங்காக்கள் இருப்பதாகவும், துரதிர்ஷ்டவசமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக சுமார் 100,000 செந்நிற குரங்குகளை அனுப்ப தயாராகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெருமளவிலான குரங்குகள் விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்துகின்றன, அதற்காக பாதுகாப்பு அமைச்சும் வனவிலங்கு அமைச்சும் ஒன்றிணைந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.