ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்கள் 8 பேருக்கு எதிராக நீதிமன்ற  தடை!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்  தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்கள் 8 பேருக்கு எதிராக நீதிமன்ற  தடை!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்  தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

பத்தரமுல்லை – பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்ற நுழைவாயில் வரையிலான வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடை செய்யும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களையக் கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்களால் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு முன்பாக இன்று முற்பகல் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில், பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.