மருதானை ரயில் நிலைய கூரையிலிருந்து வீழ்ந்தவர் வைத்தியசாலையில்!

மருதானை ரயில் நிலையத்தின் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர் கீழே வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருதானை ரயில் நிலைய கூரையிலிருந்து வீழ்ந்தவர் வைத்தியசாலையில்!

மருதானை ரயில் நிலையத்தின் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர் கீழே வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், 5ஆம் மற்றும் 6ஆம் ரயில் மேடைகளை இணைக்கும், கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை, கீழே இறக்குவதற்கு பொலிஸார் நீண்ட நேரம் போராடியும், அவர் கூரையில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.