வேலு குமார் எம்.பி.யை தாக்க முயற்சித்த இ.தொ.க உப தலைவர் செல்லமுத்துவின் அடியாட்கள்!

புசல்லாவை அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைப்பெற்றது. 

அந்த நிகழ்வில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரும் கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வின் பின் தனது அடுத்த நிகழ்விற்காக சென்றிருந்த போது தம்மை இ.தொ.க வின் உப தலைவர் செல்லமுத்து உட்பட அவரது அடியாட்கள் குழுவொன்று தாக்க முயற்சித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை தொடர்பான இ.தொ.க வின் இரட்டை முகத்தை தொடர்ச்சியாக வேலு குமார் எம்.பி. விமர்சித்து வந்தார். 

உண்மையை சொல்வதை தாங்கிக்கொள்ள முடியாமலே இவ்வாறான அநாகரீக செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர் என மக்கள் கடும் எதிர்ப்பை அவர்களுக்கு தெரிவித்தனர். 

நாடாளுமன்ற உறுப்பினரை தாக்க முயற்சித்த செல்லமுத்துவின் அடியாட்கள் மக்களின் கடும் எதிர்ப்பினால் பின்வாங்கி சென்றனர்.