பிரான்ஸில் வன்முறை மற்றம் கலவரம் - இதுவரை 13,000 பேர் கைது!

பிரான்ஸில் இடம்பெற்றுவரும் போராட்டங்களுடன் தொடர்புடைய 13 ஆயிரம் பேர் இதுவரையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில்  வன்முறை மற்றம் கலவரம் -  இதுவரை 13,000 பேர் கைது!

பிரான்ஸில் இடம்பெற்றுவரும் போராட்டங்களுடன் தொடர்புடைய 13 ஆயிரம் பேர் இதுவரையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக, நேற்றிரவு 45 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிஸில், சமிக்ஞையை மீறி மகிழுந்தில் வேகமாக பயணித்த 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றைய தினம் நான்காவது நாளாகவும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதுடன், அங்கு வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.