இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கைகையின் பின்னர் இறுதி முடிவு!

இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கைகையின் பின்னர் இறுதி முடிவு!

ஜனாதிபதி தே​​ர்தல் முடிவுகள் ஆட்சிமைப்பதற்கான விகிதாசாரம் அற்று இருந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்கு எண்ணும் பணிகள் இன்று மதியம் தொடக்கம் இரவு வரை இடம்பெற்றன.

அதனை அடுத்து இறுதி முடிவாக அநுர குமார திசானாயக்க ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னைய முடிவின் படி 5,634,915 வாக்குளைப் ​பெற்று இருந்தார்.

இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கையின் பின்னா் முன்னுரிமை வாக்கு 5,740,179 அதிகப்படியான வாக்குளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இது முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை​​யை விட  105,264 வாக்குகள் அதிகமாகும்.

​இதே வேளை சஜித் பிரேமதாசா முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் 4,363,035 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கையின் பின்னர் 4,530,902 வாக்குளைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.