செனல் 4 காணொளி குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் - மைத்திரிபால

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் வெற்றியடையவில்லை.

செனல் 4 காணொளி குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் - மைத்திரிபால

எனவே செனல் 4 வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

பிரித்தானிய செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளியை முற்றாக எம்மால் நிராகரித்துவிட முடியாது.

இருப்பினும் இந்த காணொளி முழுமையாக, உண்மை, என கூறவும் முடியாது.

எனினும் செனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சுயாதீனமான, சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.