ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் அணித் தலைவியாக சமரி அத்தப்பத்து!

ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் அணித் தலைவியாக சமரி அத்தப்பத்து!

ஐ.சி.சி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் தலைவியாக சமரி அத்தப்பத்து பெயரிடப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

முன்னதாக அவர் 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் அணிக்கு தலைவியாக சமரி அத்தப்பத்து பெயரிடப்பட்டிருந்தார். 

குறித்த 11பேர் கொண்ட குழாமில் அவுஸ்திரேலிய அணி வீராங்கனைகளே அதிகளவில் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் முழுவதும் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சமரி அத்தபத்து சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்தினார்.

கடந்த வருடம் 10 போட்டிகளில் விளையாடிய சமரி அத்தபத்து 415 ஓட்டங்களைக் குவித்திருந்தம்மை குறிப்பிடத்தக்கது.