துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

இலங்கையில் தனிப்பட்ட வகையில் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் துப்பாக்கி உரிமையாளர்கள் தமது அனுமதி பத்திரங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - பாதுகாப்பு அமைச்சின்  அறிவிப்பு!

இலங்கையில் தனிப்பட்ட வகையில் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் துப்பாக்கி உரிமையாளர்கள் தமது அனுமதி பத்திரங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த துப்பாக்கி அனுமதி பத்திரங்களை ஒக்டோபர் 01ம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான விபரங்களை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தில் (www.defence.lk) பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

2024 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் 31 க்குப் பிறகு மேற்கொள்ளப்படாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மூன்று மாத கால அவகாசத்துக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் எந்தவொரு புதுப்பித்தல்களும் அபராதம் அல்லது சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.