6 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம் - கிளிநொச்சியில் அதிசயம்!

6 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம் - கிளிநொச்சியில் அதிசயம்!

கிளிநொச்சி – பளை கச்சார்வெளி தான்தோன்றி பிள்ளையார் கோவிலில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 6 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது.

வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப்பகுதியில் கச்சார் வெளி தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 5ஆம் திருவிழாவான மாம்பழத்திருவிழா நேற்று (17) நடைபெற்றது.

மாம்பழத்திருவிழாவில் வசந்தமண்டப் பூசைகள் நிறைவுபெற்றதும் விநாயகப்பெருமானிடம் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழங்கள் இரண்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

இதன்போது, பக்தர்கள் ஏலம் விலைகூறி இறுதியாக 6 இலட்சம் வரை சென்றுள்ள நிலையில் கச்சார்வெளியினை சேர்ந்த அரியகுட்டி வள்ளிப்பிள்ளை பூலோகம் குடும்பத்தினர் அதனை ஆறு இலட்சம் ரூபாவிற்கு பெற்றுள்ளார்கள்.