கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கு 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்டுப்பாணம் செலுத்தும் காலம் எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் குறிப்பிடுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த தேர்தல் ஆணைக்குழு செயற்பட வேண்டுமென ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

அப்படி தெளிவுபடுத்தவிட்டால் எதிர்வரும் தேர்தலில் பல வாக்குகள் செல்லுபடியற்றதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.