இரட்டைக் குழந்தைகளின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை!

களுபோவிலை வைத்தியசாலையில் பிறந்த இரண்டு இரட்டைக் குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரட்டைக் குழந்தைகளின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை!

களுபோவிலை வைத்தியசாலையில் பிறந்த இரண்டு இரட்டைக் குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேட அதிகாரியொருவர் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜி.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இரு சிசுக்களின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதால், வைத்தியசாலை பணிப்பாளரிடம் விசாரணை நடத்துமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.