டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து குறித்து ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட கருத்து?

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் அனர்த்தம் தொடர்பில் டைட்டானிக் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கருத்து வெளியிட்டுள்ளார்.

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து குறித்து ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட கருத்து?

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் அனர்த்தம் தொடர்பில் டைட்டானிக் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கருத்து வெளியிட்டுள்ளார்.

டைட்டானிக் பயணிகள் கப்பலை பார்வையிடுவதற்காக சென்ற இந்த நீர்மூழ்கி கப்பல் அண்மையில் விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்த விபத்தில், டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 5 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்கா முன்னதாக அறிவித்திருந்தது.

இந்தநிலையில், அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட டைட்டானிக் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த ஜேம்ஸ் கேமரூன், "டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திலேயே இந்த விபத்து நடந்து இருப்பது என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நான் அந்த பகுதிக்கு 33 முறை சென்று இருக்கிறேன். அங்கு எனக்கு கூட சில பயங்கரமான அனுபவங்கள் ஏற்பட்டன. 

அந்த பகுதியில் கிட்டத்தட்ட 3,500 மீட்டர் ஆழம் இருக்கும். அதனால் நீர்மூழ்கி கப்பல் மீது அதிகமான அழுத்தம் இருக்கும். 

அங்கு ஒவ்வொரு கணமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிறிய தவறு நடந்தாலும் விலாசம் இல்லாமல் ஆகி விடுவோம்.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய பகுதியில் இனம்புரியாத அதீதமான ஏதோ ஒரு சக்தி இருக்கிறது.

வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் புதிய தொழில்நுட்பத்தில் சென்சார்ஸ் உள்ளன.

அதற்குள் இருக்கும் மனிதர்கள் விபத்தை முன்கூட்டியே கண்டுபிடித்து இருப்பார்கள். 

அதில் இருந்து ஜாக்கிரதையாக வெளியேறும் வழிகளும் உள்ளன.

ஆனாலும் எதிர்பாராமல் நீர்மூழ்கி கப்பல் வெடித்துவிட்டதால் அவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர்'' என்றார்.