பிக்பாஸ் வீட்டை விட்டு செல்கிறார் ஆண்டவர்? நிகழ்ச்சியை நடத்த போவது யார்? ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமல் விலகிவிட்ட நிலையில் அடுத்து யார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

பிக்பாஸ் வீட்டை விட்டு செல்கிறார் ஆண்டவர்? நிகழ்ச்சியை நடத்த போவது யார்? ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?

.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அதை நடத்தி வருபவர் நடிகர் கமல்ஹாசன்தான். இன்னும் சொல்லப்போனால் அவர் நடத்தியதாலேயே அந்நிகழ்ச்சி பிரபலமானது என்றும் கூறலாம். 

ஏனெனில், அப்போது கமல் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். 

மற்றொன்று இது போன்ற ஒரு  ​தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கமலை யாரும் பார்த்தது இல்லை. 

இதனாலேயே, அந்த நிகழ்ச்சியை பார்க்க பலரும் ஆர்வம் காட்டினார்கள்.

அதோடு, கமலின் அனுபவம், போட்டியாளர்களை அவர் அணுகும் முறை. அவரின் பேச்சில் இருக்கும் பக்குவம், தவறுகளை கூட நாசுக்கக சுட்டிக் காட்டும் அவரின் சாதுர்யம் என எல்லாமே ரசிகர்களை கவர்ந்தது.

இதனால், திங்கள் முதல் வெள்ளி வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட கமல் வருவர் என்பதற்காக சனி, ஞாயிறு நாட்களில் அவருக்காவே பார்த்தார்கள். கணிவு காட்ட வேண்டிய இடத்தில் கணிவும், கண்டிப்பை காட்ட வேண்டிய இடத்தில் கச்சிதமாக அதை காட்டினார் கமல். 

இதுவரை வெளியான 7 சீசன்களையும் கமலே நடத்தினார். 7வது சீசனில் பிரதீப் ஆண்டனியிடம் கமல் நடந்து கொண்டது சரியில்லை என்கிற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில்தான், விரைவில் துவங்கவுள்ள 8வது சீசனை சினிமா பணிகள் காரணமாக நான் நடத்தவில்லை என கமல் சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை வேறு மாதிரி திரித்தும் பலரும் சொல்லி வருகிறார்கள்.

மற்றவர்களை ஒப்பிட்டால் விஜய் சேதுபதி சரியான தெரிவு என பலரும் சொல்கிறார்கள். 

ஏனெனில், அவரின் பேட்டிகளை பார்க்கும்போது அவரிடம் பக்குவம் தெரிகிறது. எந்த கேள்விக்கும் நிதானமாக, தத்துவார்த்தமாக பதில் சொல்கிறார். 

எனவே, அவர் வந்தால் நிகழ்ச்சியை சரியாக நடத்துவார் என சிலர் நம்புகிறார்கள். 

விஜய் டிவியும் பல நடிகர்களுக்கும் வலை விரிக்கவிருக்கிறது. அதேநேரம், யார் வந்தாலும் அது கமலை போல வருமா என தெரியவில்லை. 

யார் வந்தாலும் அவர்கள் கமலை மறக்க வைக்க வேண்டும். இல்லையேல், எத்தனை சீசன் வந்தாலும் கமலை போல இல்லை என ரசிகர்கள் சொல்ல வாய்ப்பிருக்கிறது.