கஜேந்திரகுமாருக்கு வெளிநாடு செல்ல கிளிநொச்சி நீதிமன்றம் தடை!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்ல தடை விதித்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்விட்டர் பதிவொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமாருக்கு வெளிநாடு செல்ல கிளிநொச்சி நீதிமன்றம் தடை!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்ல தடை விதித்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்விட்டர் பதிவொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.

காவல்நிலையத்தில் முன்னிலையாகும், வரை அவருக்கு எதிராக பயணத்தடை விதிக்குமாறு மருதங்கேணி காவல்துறையினர் நீதிமன்றை கோரியிருந்தனர்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த கிளிநொச்சி நீதிவான், பயணத்தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்றிருந் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் குறித்த உத்தரவை கையளித்தனர்.

அதன்படி, எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு மருதங்கேணி காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ட்விட்டரின் தெரிவித்துள்ளார்.