வாள்வெட்டுகளுடன் தொடர்புடையவர் கோப்பாயில் கசிப்புடன் கைது!

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தபோதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேக நபரிடம் இருந்து 15 லீற்றர் கசிப்பும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.