கொழும்பில் பசும்பால் விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு பசும்பால் விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் பசும்பால் விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு பசும்பால் விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் குறித்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு பசும்பால் விநியோகிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் வளாகத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.