அஸ்வெசும குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

அஸ்வெசும குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் போலியான தகவல்களை வழங்கி கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளும் பயனாளிகளைக் கண்டறிவதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிரூபம் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும்அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெற்றுக் கொள்வது உறுதி செய்யப்பட்டால், அவ்வாறான தரப்பினருக்கான கொடுப்பனவு இடைநிறுத்தப்படும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.