சூறாவளிக்கான சாத்தியம் இல்லை - சூரியகுமரன்

அராபிய கடல் பிராந்தியத்தில் ஒரு சூறாவளியும்,வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு சூறாவளியுமாக இரு சூறாவளிகள் உருவாகும் சாத்தியம் உள்ளது என கடந்த 20 ஆம் திகதி சிரேஸ்ட வானிலை ஆய்வாளர் சூரியகுமாரன் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போதுள்ள வானிலை அமைப்பின்படி உருவாகும் தாழமுக்க பகுதிகள் வலுவான தாழமுக்கமாகவே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே குறிப்பிட்டது போல் அராபிய கடல் பிராந்தியத்தில் உருவாகி இருந்த தாழமுக்கமானது வலுவடைந்து, தற்போது அதன் வலு குறைவடைய தொடங்கி இருக்கின்றது.
இதேபோன்று இன்று ஒரிசா கடல் பிராந்தியத்திற்கு அப்பால் வடமேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு தாழமுக்கப் பகுதியானது (Low Pressure Area) உருவாகி உள்ளது.
இது வடக்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, அடுத்த வரும் 24 மணித்தியாலத்தில் நன்கமைந்த தாழமுக்க பகுதியாக (Well Marked Low Pressure Area) மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது பின்னர் தாழமுக்கமாக (Depression), ஆழ்ந்த தாழமுக்காமாக (Deep Depression) மேலும் வலுவடையும் எனஅவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.