50 இலட்சம் பெறுமதியான வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

50 இலட்சம் பெறுமதியான வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

50 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கை விற்பனை செய்வதற்கு முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் மொரொன்துடுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவரென தெரியவந்துள்ளது.

விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பேருவளை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.