இந்த மாதத்தின் முதல் ஆறு  நாட்களில் மாத்திரம் 40 ஆயிரத்து 877 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.

இந்த மாதத்தின் முதல் ஆறு  நாட்களில் மாத்திரம் 40 ஆயிரத்து 877 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரஸ்யாவில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, ரஷ்யாவிலிருந்து ஐயாயிரத்து 800 பேரும், இந்தியாவில் இருந்து ஐயாயிரத்து 602 பேரும் ஜேர்மனியில் இருந்து நான்காயிரத்து 110 பேரும் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 18 ஆயிரத்து 350 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.