நுவரெலியாவில் வானை நோக்கி 38 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்!

நுவரெலியா - ஹங்குராங்கெத்த பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் வானை நோக்கி 38 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

நுவரெலியாவில் வானை நோக்கி 38 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்!

நுவரெலியா - ஹங்குராங்கெத்த பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் வானை நோக்கி 38 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய சுமார் 200 பேர் கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டு பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஹங்குராங்கெத்த தியதிலகபுர பகுதியில் கடந்த 25ம் திகதி ஒருவர் தாக்கி கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 8 சந்தேக நபர்கள் குறித்த பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை கைது செய்யுமாறு கோரி, சுமார் 200 பேர் வரை நேற்று இரவு ஹங்குராங்கெத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சென்று அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளனர்.

தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அதேநேரம் சம்பவத்தில் உயிரிழந்தவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் தரப்பினரின் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.