மத்துகமவில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட ஒருவர் கொலை!

மத்துகமவில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட ஒருவர் கொலை!

தென்னிலங்கை - மத்துகம பகுதியில் இன்று (03) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.

அத்துடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.