கெஹலிய ரம்புக்வெல்ல - 15 வரை விளக்கமறியல் - சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!வரை விளக்கமறியல்!

கெஹலிய ரம்புக்வெல்ல  - 15 வரை விளக்கமறியல் - சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!வரை விளக்கமறியல்!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமாருமானகெஹெலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை இம்மாதம் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று காலை 9 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்படி, சுமார் 10 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

Update 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.