சுகாதார தொழிற்சங்கங்களின் பணிபுறக்கணிப்பு ஒத்திவைப்பு!

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிபுறக்கணிப்பு ஒத்திவைப்பு!

சுகாதார தொழிற்சங்கங்கள் நாளைய தினம் முன்னெடுக்க தீர்மானித்திருந்த பணிபுறக்கணிப்பு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் இதனை தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் தலைவர்களின் கூட்டத்திற்கு பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் எழுத்து மூல கோரிக்கையை கருத்திற் கொண்டு குறித்த பணிபுறக்கணிப்பு ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.