பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை இன்று முதல்

பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை இன்று முதல்

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை இன்று முதல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 பரீட்சை திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் 29ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 41 பரீட்சை நிலையங்களில் இந்த செயன்முறை பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சார்த்தியின் அனுமதி அட்டையில் பரீட்சைக்கு தோற்றும் திகதி மற்றும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.