ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21இல் நடைபெறும் - சுயாதீன வேட்பாளராக ரணில்!

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21இல் நடைபெறும் - சுயாதீன வேட்பாளராக ரணில்!

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

அதேபோல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி அதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.