தப்பிச்சென்ற மரண தண்டனை கைதி மீண்டும் பொலிஸாரால் கைது!

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற மரண தண்டனை கைதியை பொலிஸ் கைது செய்துள்ளனர்.

தப்பிச்சென்ற மரண தண்டனை கைதி மீண்டும் பொலிஸாரால் கைது!

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற மரண தண்டனை கைதியை பொலிஸ் கைது செய்துள்ளனர்.

மத நிகழ்ச்சி ஒன்றிற்காக சிறையில் இருந்து குறித்த கைதி இன்று காலை வெளியில் சென்ற நிலையில், தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போலியான தகவல்களை வழங்கி வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலின் ஊடாக தப்பிச்சென்றிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த கைதி மீது சந்தேகம் கொண்ட சிறைச்சாலைகள் அதிகாரிகள் அவரை பின்தொடர்ந்த நிலையில், மருதானை ரயில் நிலையத்தில் ரயிலல ஏற முற்பட்ட போது அவரை கைது செய்துள்ளனர்.

அவர் கைது செய்யப்பட்ட போது, குறித்த கைதி வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி அணியும் ஆடைக்கு நிகரான ஆடையினை அணிந்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

கைதானவர் பல கொலைக் குற்றச்சாட்டுக்களுடன், தொடர்புடையவர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.