மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி வேண்டிய யாழில் நடத்தப்பட்ட போராட்டம்!

   
மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் - நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைந்த கட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், சைவ மகா சபையினர், மத தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களால் மட்டக்களப்பு  மாவட்டத்தில் நேற்று (16) கவயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.