மும்பை தாராவியில் பிரம்மாண்ட பொங்கல் விழா!

மும்பை தாராவி பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு அமைந்துள்ள 90 அடிகளைக் கொண்ட வீதியில் நேற்று முன்தினம் பொங்கல் விழா நடத்தப்பட்டுள்ளது.

மும்பை தாராவி பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு அமைந்துள்ள 90 அடிகளைக் கொண்ட வீதியில் நேற்று முன்தினம் பொங்கல் விழா நடத்தப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் சுமார் 2000 பெண்கள் ஒன்று கூடி பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைத்தனர்.

நடிகை கஸ்தூரி மற்றும் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் விழாவை ஆரம்பித்து வைத்தனர். 

நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒன்றிணைந்து கோலமிட்டு, பொங்கல் வைத்து கொண்டாடியமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.