ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

இராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கைச் சிறையில் உள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மீனவர்களை படகுடன் விடுதலை செய்யாவிட்டால் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.