137 பேரை கொலை செய்த நபர்கள் நையப்புடைப்பு!

137 பேரை கொலை செய்த நபர்கள் நையப்புடைப்பு!

ரஷ்யா - மொஸ்கோ இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தி 137 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் நையப்புடைக்கப்பட்ட நிலையிலும் நான்காவது நபர் சக்கர நாற்காலியிலும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நால்வர் மீது ரஷ்ய காவல்துறையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் ஒருவருக்கு மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

சந்தேக நபர்களின் முகங்களில் அடி காயங்கள் காணப்படுவதுடன் முகங்கள் வீங்கிய நிலையில் காணப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.