நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு எஸ்.சி.முத்துகுமாரன தெரிவு

நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு எஸ்.சி.முத்துகுமாரன தெரிவு

உத்திக பிரேமரத்னவின் பதவி விலகலை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு எஸ்.சி.முத்துகுமாரன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரட்ன தமது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற பிரதி பொது செயலாளர் சமிந்த குலரத்னவிடம் கடந்த 27ஆம் திகதி கையளித்தார்.

இதனையடுத்து, அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான உத்திக பிரேமரட்ன அந்த பதவியில் இருந்து விலகியமையினால், நாடாளுமன்ற வெற்றிடம் நிலவுவதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகமான குஷானி ரோஹனதீர, எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறியப்படுத்தியிருந்தார்.

கடந்த பொதுத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உத்திக பிரேமரட்னவுக்கு அடுத்ததாக அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருந்த, எஸ்.சி முத்துகுமாரன நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.