விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்து புதிய அறிவிப்பு - கல்வி ராஜாங்க அமைச்சர்

விடுமுறை வழங்கப்பட்டிருந்த ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று முதல் வழமைப்போல் இயங்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்து புதிய அறிவிப்பு  - கல்வி ராஜாங்க அமைச்சர்

விடுமுறை வழங்கப்பட்டிருந்த ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று முதல் வழமைப்போல் இயங்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த புதன்கிழமை முதல் ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

தற்போது அங்கு சீரான காலநிலை நிலவுவதை கருத்திற்கொண்டு பாடசாலைகளை வழமைப்போல் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.