அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை தொடர்பான விசேட அறிவிப்பு

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை தொடர்பான விசேட அறிவிப்பு

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06.06.2025 வெள்ளிக்கிழமை மற்றும் 09.06.2025 திங்கட்கிழமை ஆகிய தினங்களில் நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி தினங்களுக்கு பதிலாக 26.05.2025 திங்கட்கிழமை மற்றும் 27.05.2025 செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் பாடசாலை நடாத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025 பாடசாலை ஆண்டில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை 26.05.2025 அன்று ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.