இலங்கையில் புதிதாக 40 இலட்சம் பேர் வறியவர்கள் பட்டியலில் இணைவு!

இலங்கையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 40 இலட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளனர்.

இலங்கையில் புதிதாக 40 இலட்சம் பேர் வறியவர்கள் பட்டியலில் இணைவு!

இலங்கையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 40 இலட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளனர். 

நாட்டில் Learn Asia நிறுவகம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 

அதன்படி, 2023 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் மொத்த வறியவர்களின் எண்ணிக்கை 70 இலட்சமாக இருக்கும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறித்த ஆய்வின்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களில் 81 சதவீதம் பேர் கிராமப்புற மக்கள் என்றும், 2019 முதல், கிராமப்புற வறுமை 15 சதவீதத்திலிருந்து 32 சதவீதம் என்ற அடிப்படையில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், 2019 இல் 6 சதவீதமாக இருந்த நகர்ப்புற வறுமை மூன்று மடங்காக உயர்வடைந்து 18 சதவீதமாக உள்ளது.

அத்துடன், பெருந்தோட்ட சமூகத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.