தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளை விடுவிக்க கோரி, தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மீனவர் பிரச்சினைக்கு உடனடியாக நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 28 நாட்களில் மாத்திரம் 6 சந்தர்ப்பங்களில், 88 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 12 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், இலங்கையில் தற்போது சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 77 மீனவர்களையும் 151 படகுகளையும் உடனடியாக விடுவிக்க  தேவையான அனைத்து தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிம் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் கோரியுள்ளார்.