கைத்தொலைபேசி சிம் கார்டுகளை மீண்டும் பதிவு செய்யும் நடவடிக்கை - TRCSL அறிவிப்பு!

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) பொதுமக்களின் கையடக்கத் தொலைபேசி சிம் அட்டைகளைப் புதுப்பிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிம் கார்டுகளை மீண்டும் பதிவு செய்யும் திட்டத்தை நாடு தழுவிய அளவில் நடத்த முடிவு செய்துள்ளது.

கைத்தொலைபேசி சிம் கார்டுகளை மீண்டும் பதிவு செய்யும் நடவடிக்கை - TRCSL அறிவிப்பு!

அதன்படி வேறு யாரேனும் ஒருவர் பெயரில் சிம்கார்டுகளை பயன்படுத்தினால் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் திங்கட்கிழமை (13) முதல் சனிக்கிழமை (18) காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இத்திட்டத்தின் முதல் கட்டம் அமுல்படுத்தப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தங்கள் மொபைல் சிம் கார்ட் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் தங்கள் தொலைபேசி எண்களை குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தினால் அவர்கள் பொறுப்பேற்க நேரிடும் என்றும்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.