மாதாந்த நினைவு வணக்க நிகழ்வு பங்குனி-2024!

மாதாந்த நினைவு வணக்க நிகழ்வு பங்குனி-2024!

கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது போன்று இம்மாதமும் தமிழீழ போராட்ட வரலாற்றில் இம்மாத காலப்பகுதியில் வீரச்சாவினை தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களையும் இதே காலப்பகுதியில் இனப்படுகொலை செய்யப்பட்ட எம் மக்களையும் நினைவு கூர்ந்து, உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் மாதாந்த நினைவு வணக்க நிகழ்வு 31.03.2024 அன்று மாலை 3.00 மணி அளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 28.02.2024 அன்று தமிழகத்தில் சாவடைந்த "மாவீரன் சாந்தன்" அவர்களுடைய தியாகமும் நினைவு கூறப்பட்டது.

திரு.சிறி, திருமதி.குயிலினி, திரு.கொட்வின், செல்வி.துவாரகா, செல்வன், பகலவன், ஆகியோர் பொதுச்சுடர் ஏற்ற நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தமிழீழ தேசியக் கொடியினை செல்வி. இசைவதனி ஏற்றினார்.

பொது மாவீரருக்கான ஈகைச்சுடர்னை திருமதி.துக்சி ஏற்ற மலர் மாலையினை திருமதி.ஜெசிந்தா அணிவித்தார்.

தொடர்ந்து மாவீரன் சாந்தனருடைய திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடரினை திரு.குணா மாமா  ஏற்ற, மலர் மாலையினை திரு ஆறுமுகம்  அணிவித்தார்.

தொடர்ந்து இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த உரித்துடையோர்கள் தமது மாவீரர் சொந்தங்களுக்கு ஈகைச் சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர்.

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் நிதி பொறுப்பாளரும் படைத்துறை செயலாருமான கேணல்.தமிழேந்தி அவர்களுக்கு திரு.செவ்வாணன் அவர்களும் திரு.தாஸ் அவர்களும், கப்டன்.திரு அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு அவரது சகோதரர் ஜேம்ஸ் குடும்பத்தினரும்,

லெப்.கேணல் வானதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு வினோதன் குடும்பத்தினரும், வீரவேங்கை வதனன் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு அவரது உறவினர் திருமதி.வீரன் குடும்பத்தினரும்,

வீரவேங்கை ஜெயசக்தி அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு அவரது சகோதரன் சுசீலன் குடும்பத்தினரும், 

லெப்.செந்தாளன் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு அவரது சகோதரர்கள் திரு.இலக்கியன், மற்றும் திரு.ஜெயனோகரன் ஆகியோரும்,

கப்டன் நிவேதன் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு அவரது பெறாமகன் திகழ் அவர்களும், லெப்.சித்தா அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு அவரது சகோதரி திருமதி.உதயராணி குடும்பத்தினரும் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.

அவர்களைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளும் அங்கு நிரைப் படுத்தப்பட்டிருந்த மாவீரர்களுடைய திருவுருவப் படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்து தமது வீரவணக்கத்தினை தெரிவித்தனர்.

"தாய் மண்ணை முத்தமிட வேண்டும்" என்ற பாடலுக்கு இளையவர்கள் செல்வி.யுகேசனா திவாகரன், செல்வி.வியிலி சிவதாஸ் ஆகியோர் நடனத்தை வழங்கியிருந்தார்கள்.

மாவீரர் எழுச்சி பாடல்களை திரு.மைக்கல், திரு.சுரேஷ் மற்றும் செல்வி.விகேசனா திவாகரன் ஆகியோர் வழங்க, நினைவுரைகளை திரு.புரட்சி அவர்களும் திரு.ரூபன் அவர்களும் வழங்கி இருந்தார்கள்.

மாவீரர் பணிமனை ஏற்பாட்டில் உணர்வழிச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்வு உறுதி ஏற்புடன் நிறைவடைந்தது.