சங்கு சின்னத்தில் களமிறங்கும் தமிழ் பொது வேட்பாளர்!

சங்கு சின்னத்தில் களமிறங்கும் தமிழ் பொது வேட்பாளர்!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடும் பா. அரியநேத்திரனின் (P. Ariyanethran) வேட்பு மனு சற்று முன்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், தமிழ்ப் பொது வேட்பாளர் சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இம்முறை தேர்தலில் வடக்கு - கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் போட்டியிடவுள்ளார். 

தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மற்றும் சமூக மட்ட சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து பொதுக்கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கி, இந்த பொது வேட்பாளரை களமிறக்குகின்றன.

அந்தவகையில், தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரனின் வேட்பு மனு சற்று முன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்  சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தமிழ் பொதுக் கட்டமைப்பு அறிவித்துள்ளது.