நாட்டின் பல பகுதிகளில் நாளை வெப்பநிலை அதிகரிக்கும்?

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டவிலயல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் நாளை வெப்பநிலை அதிகரிக்கும்?

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டவிலயல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும், நாளைய தினம் அதிகரித்த வெப்பம் நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் குறித்தப் பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதிகரித்திருக்கும் என அந்த திணைக்களத்தின் சிரேஷ்ட வானிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, வெப்பநிலை, நாளைய தினம் எச்சரிக்கை மட்டத்தை அடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரி மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டங்கள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளன.

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர் பெருக்கெடுக்கும் நிலையிலிருந்து, 38 அடி வரை வற்றியுள்ளதாக நீர்தேக்கத்தின் பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நுவரெலிய நகரில் இன்று ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான காலம் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.