கனடாவில் கொலை செய்யப்பட்ட  இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நாளை

கனடாவில் கொலை செய்யப்பட்ட  இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நாளை

கனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட  6  இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் நாளை (17) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இறுதிக்கிரியை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 01.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 இலங்கையர்கள் கடந்த 7ஆம் தினம் கொல்லப்பட்டனர்.

35 வயதுடைய தர்ஷனி ஏகநாயக்க என்ற தாயும் அவரது ஏழு வயதான மகன், நான்கு மற்றும் இரண்டு வயது நிரம்பிய இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மாதங்களேயான குழந்தை உள்ளிட்ட நான்கு பிள்ளைகளும் இவ்வாறு கொல்லப்பட்டனர்.

அத்துடன், குறித்த வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய காமினி அமரகோன் என்ற அவர்களது நண்பர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் , கொலைகளின் தன்மைக்கேற்ப மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கனடா ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.